பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

பாலிவுட்டில் ஏற்கனவே இரண்டு பாகங்களாக அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஹேரா பெரி. பிரியதர்ஷன் இயக்கத்தில் 2001ல் முதல் பாகமும், நீரஜ் ஓரா இயக்கத்தில் 2006ல் இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றன. இந்த இரண்டு பாகங்களிலும் நடிகர்கள் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் நடித்தனர். தற்போது இதன் மூன்றாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் தான் இயக்குவதாக சொல்லப்படுகிறது. ஹீரோவான அக்ஷய் குமாரே தயாரிக்கிறார்.
இன்னும் படப்பிடிப்பு துவங்காத நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து தான் விலகி உள்ளதாக நடிகர் பரேஷ் ராவல் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இதனை தொடர்ந்து அவர் மீது 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் தயாரிப்பாளரான அக்ஷய் குமார். பதிலுக்கு தனது வழக்கறிஞர் மூலமாக தயாரிப்பாளரான அக்ஷய் குமாருக்கு இது குறித்து விளக்கம் அளித்து பதில் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் அதை படித்தார்கள் என்றால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் என்றும் சஸ்பென்சாக நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் நடிகர் பரேஷ் ராவல். இந்த நிலையில் பரேஷ் ராவலின் வழக்கறிஞர் எதனால் அவர் விலகினார் என்கிற உண்மையை வெளியிட்டுள்ளார்.
அதாவது படத்தின் கதை திரைக்கதை எதுவுமே பரேஷ் ராவலுக்கு சொல்லப்படவில்லை. அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டது தவிர முழுமையான ஒப்பந்தம் எதுவும் பரேஷ் ராவலிடம் போடப்படவில்லை. இது ஒரு பக்கம் இருக்க முதல் இரண்டு பாகங்களையும் தயாரித்தது பிரபல தயாரிப்பாளான சஜித் நாடியத்வாலாவின் குடும்பத்தினர் தான். குறிப்பாக இரண்டாவது பாகத்தை அவரது மருமகனான பிரோஸ் நாடியத்வாலா தயாரித்திருந்தார். ஆனால் இந்த மூன்றாம் பாகத்தை அக்ஷய் குமார் தயாரிப்பாக முடிவானது.
அதனால் பிரோஸ் நாடியத்வாலா பரேஷ் ராவலை அழைத்து இந்த படம் உருவாக ஆரம்பித்தால் பிரச்சனையை சந்திக்கும். அதனால் தயவு செய்து இப்போதே இந்த படத்தில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அதனால் நம் நட்பில் விரிசல் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்தே இந்த படத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன் என அந்த விளக்க நோட்டீஸில குறிப்பிட்டுள்ளார் பரேஷ் ராவல்.