7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

மலையாள திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக நடித்து வருபவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் பிடிபட்ட போதை பொருள் கடத்தும் கும்பல், நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு தாங்கள் தொடர்ந்து போதைப்பொருள் சப்ளை செய்வதாக வாக்குமூலத்தில் கூறியிருந்தனர்.
அதேபோல ஷைன் டான் சாக்கோவுடன் ஒரு படத்தில் நடித்த சக நடிகையான வின்சி அலோசியஸ் என்பவர், படப்பிடிப்பிலேயே ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்ள முயற்சித்தார் என குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி சாக்கோ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை இவரை கடந்த சில நாட்களாக விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில், தான் போதைப் பொருள் பயன்படுத்துவதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார் ஷைன் டாம் சாக்கோ. அதுமட்டுமல்ல, இந்த பாதிப்பில் இருந்து, தான் வெளியே வர வேண்டும் என விரும்பும் சாக்கோ, இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதை மீட்பு மையத்திற்கு தான் செல்ல விரும்புவதாகவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் விரைவில் போதை மீட்பு மையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார் என்று காவல்துறையில் இருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.