தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் |

பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய சினிமாவுக்கு வந்தவர் வாமிகா கபி. தமிழில் 'மாலை நேரத்து மயக்கம், இரவாக்காலம்' படங்களில் நடித்தார். தற்போது 'ஜீனி' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பான் இந்தியா படமாக தயாராகி வரும் 'ஜி2' படத்தில் ரகசிய உளவு பிரிவு ஏஜெண்டாக நடிக்கிறார். ஆதவ் சேஷ் படத்தின் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக இம்ரான் ஹாஷ்மி நடிக்கிறார்.
இவர்கள் தவிர, முரளி ஷர்மா, சுப்ரியா யர்லகட்டா மற்றும் மது ஷாலினி உட்பட பலர் நடிக்கின்றனர். பீப்பிள் மீடியா பேக்டரி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் - மற்றும் ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் சார்பில் டி ஜி விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார்கள்.
படத்தில் நடிப்பது பற்றி வாமிகா கபி கூறும்போது “இந்த படத்தில் நான் 'உளவு ஏஜெண்ட் 116' என்ற கேரக்டரில் நடிக்கிறேன். ஐரோப்பிய நாட்டில் இந்தியாவுக்கு எதிராக நடக்கும் சதியை முறியடிப்பது மாதிரியான கதை. 'ஜி 2' எனும் அற்புதமான திரை அனுபவத்தின், நம்பமுடியாத பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த ஸ்பை உலகில் அடியெடுத்து வைத்தது சிலிர்ப்பான மற்றும் சவாலான அனுபவமாக இருந்தது. மிகத் திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணிபுரிவது, என் கதாபாத்திரத்திற்கு புதிய ஆற்றலைக் கொண்டுவர எனக்குப் பேருதவியாக அமைந்தது” என்றார்.