ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நேற்று அவருடைய 83வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
ஆனால், அவரது மருமகளான ஐஸ்வர்யா ராய் மிகவும் தாமதமாக நேற்றைய நாள் முடியப் போகும் இரவு நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அமிதாப்புடன் தன் மகள் ஆராத்யா இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பா-தாதாஜி, கடவுள் எப்போதும் ஆசீர்வாதிக்கட்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா, அபிஷேக் ஆகியோரின் மகளான ஆராத்யா இப்போது நன்றாகவே வளர்ந்துவிட்டார். ஆனால், சில வருடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஐஸ்வர்யா பகிர்ந்திருப்பதும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.