தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு 'ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்' என்ற பெயரில் ஹிந்தியில் படமாக உருவாகிறது. ரன்தீப் ஹூடா இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தை ரன்தீப் ஹூடா பிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலரில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் பரபரப்பை கிளப்பி உள்ளது.
“அகிம்சை மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று நாம் அனைவரும் படித்திருக்கிறோம், ஆனால் இது அந்தக் கதை அல்ல” என்ற பின்னணி குரலோடு தொடங்கும் டிரைலரில் அந்தமான் சிறையில் வீர் சாவர்க்கர் துன்புறுத்தப்படும் காட்சிகள் இடம்பெறுகிறது. "வெள்ளையரை முழுதாக விழுங்கக்கூடிய மக்களை நான் திரட்டிக் கொண்டிருக்கிறேன்" என்கிறார். இந்த கருத்துகளும், காட்சிகளும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒருநாளில் இந்த டிரைலர் கிட்டத்தட்ட 80 லட்சம் பார்வைகளை நெருங்கி உள்ளது.