சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தொலைக்காட்சிகளில் தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கிய காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் கவிதா சவுத்ரி. தூர்தர்ஷனில் 1989ம் ஆண்டுகளில் இருந்து 1991ம் ஆண்டு வரை ஒளிபரப்பான 'உதான்' என்ற தொடரில் போலீஸ் அதிகாரி கல்யாணி சிங் கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர். பல தொடர்களில் நடித்த அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
வயது மூப்பின் காரணமாக கடந்த சில வருடங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கி அமிர்தசரசில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போதே அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கவிதா சவுத்ரி இறந்தார். அவருக்கு வயது 67. கவிதா சவுத்ரியின் மரணத்துக்கு பிரபல நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.