ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
டில்லியை சேர்ந்த தொழிலதிபரிடம் 200 கோடி மோசடி, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் உள்ளிட்ட பல வழக்குகளில் பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடியில் கிடைத்த பணத்தில் சுகேஷின் காதலியும், பாலிவுட் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு 10 கோடி வரை கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வந்த நிலையில், சிறைக்குள் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு அவ்வப்போது சுகேஷ் காதல் கடிதங்களை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். ஜாக்குலினும் “நான் அவரோடு நெருக்கமாக இருந்தது உண்மைதான். அவர் மோசடி பேர்வழி என்பது தெரியாது. அவரிடம் பரிசு பொருட்கள்தான் வாங்கி இருக்கிறேன் பணம் வாங்கவில்லை” என்று கூறி வந்தார்.
இந்த நிலையில் டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவுக்கு ஜாக்குலின் ஒரு புகார் மெயில் அனுப்பி உள்ளார். அதில், “சிறையில் இருந்து கொண்டே சுகேஷ் என்னை மிரட்டுகிறார். கோர்ட்டில் உண்மையை சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். இதனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாக என்னை மிரட்டும் சுகேஷூக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அதோடு அவர் எழுதும் கடிதங்கள், எனது தனிப்பட்ட உரிமைகளை பாதிக்கிறது. அதையும் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.