நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

முன்னணி நடிகர், நடிகைகளின் பெயரில் போலியாக எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் கணக்குள் தொடங்கி, சினிமா வாய்ப்பு தருகிறோம். என்னை நீங்கள் சந்திக்கலாம். நான் நடத்தும் அறக்கட்டளைக்கு உதவுங்கள் என்கிற ரீதியில் பதிவுகள் வெளியிட்டு பல மோசடிகள் நடந்து வருகிறது. இதுபற்றி அறியாத அப்பாவி மக்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகர், நடிகை பணம் கேட்கிறாரே என்று பணத்தை அனுப்பி விடுகிறார்கள்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலனின் பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் “எனது பெயரில் மர்ம நபர் வாட்ஸ் ஆப் மூலம் செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். வாட்ஸ் ஆப்பில் எனது புகைப்படத்தை டி.பி.யில் வைத்துக்கொண்டு நான்தான் வித்யாபாலன் என்று கூறி மோசடி வேலையில் ஈடுபட்டு வருவதாக எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே அது போன்ற நபர்களிடமிருந்து அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்'' என்று பதிவிட்டுள்ளார்.