சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
முன்னணி நடிகர், நடிகைகளின் பெயரில் போலியாக எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் கணக்குள் தொடங்கி, சினிமா வாய்ப்பு தருகிறோம். என்னை நீங்கள் சந்திக்கலாம். நான் நடத்தும் அறக்கட்டளைக்கு உதவுங்கள் என்கிற ரீதியில் பதிவுகள் வெளியிட்டு பல மோசடிகள் நடந்து வருகிறது. இதுபற்றி அறியாத அப்பாவி மக்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகர், நடிகை பணம் கேட்கிறாரே என்று பணத்தை அனுப்பி விடுகிறார்கள்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலனின் பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் “எனது பெயரில் மர்ம நபர் வாட்ஸ் ஆப் மூலம் செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். வாட்ஸ் ஆப்பில் எனது புகைப்படத்தை டி.பி.யில் வைத்துக்கொண்டு நான்தான் வித்யாபாலன் என்று கூறி மோசடி வேலையில் ஈடுபட்டு வருவதாக எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே அது போன்ற நபர்களிடமிருந்து அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்'' என்று பதிவிட்டுள்ளார்.