ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
முன்னணி நடிகர், நடிகைகளின் பெயரில் போலியாக எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் கணக்குள் தொடங்கி, சினிமா வாய்ப்பு தருகிறோம். என்னை நீங்கள் சந்திக்கலாம். நான் நடத்தும் அறக்கட்டளைக்கு உதவுங்கள் என்கிற ரீதியில் பதிவுகள் வெளியிட்டு பல மோசடிகள் நடந்து வருகிறது. இதுபற்றி அறியாத அப்பாவி மக்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகர், நடிகை பணம் கேட்கிறாரே என்று பணத்தை அனுப்பி விடுகிறார்கள்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலனின் பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் “எனது பெயரில் மர்ம நபர் வாட்ஸ் ஆப் மூலம் செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். வாட்ஸ் ஆப்பில் எனது புகைப்படத்தை டி.பி.யில் வைத்துக்கொண்டு நான்தான் வித்யாபாலன் என்று கூறி மோசடி வேலையில் ஈடுபட்டு வருவதாக எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே அது போன்ற நபர்களிடமிருந்து அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்'' என்று பதிவிட்டுள்ளார்.