நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் படம் 'பைட்டர்'. அனில் கபூர், அக்ஷய் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். வயாகாம் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. படம் வருகிற ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் படம் வெற்றி பெறுவதற்காக தீபிகா படுகோனே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் தனது குடும்பத்தினருடன் மலைப்பாதையில் உள்ள நடைபாதையில் பாதயாத்திரையாக திருமலைக்கு நடந்து சென்றார். பக்தர்களுடன் இரண்டரை மணி நேரம் நடந்து திருமலையை அடைந்தார். வழிநெடுக படி பூஜையும் செய்தார். நடைபாதையில் நடந்து சென்ற பக்தர்கள் தீபிகாபடுகோனேவுடன் செல்பி எடுத்து கொண்டனர். திருமலை சென்று அடைந்ததும் அங்குள்ள ராதேயம் விருந்தினர் மாளிகையில தங்கினார் பின்னர் நேற்று அதிகாலையில் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.