சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் | தங்கர் பச்சான் மகன் படத்தில் நடிக்கும் போது வலியை அனுபவித்து அழுதேன்: ஷாலி | எனது கதையைத்தான் திருடி இருக்கிறார்கள் : 'லாபத்தா லேடிஸ்' கதாசிரியர் குற்றச்சாட்டு | சினிமாவில் நடிப்பது எனது தனிப்பட்ட முடிவு : குஷ்பு மகள் அவந்திகா சொல்கிறார் | பிளாஷ்பேக்: முதல் செஞ்சுரி அடித்த சிவாஜி | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் காணாமல் போன நடிகை | 'ஸ்டன்ட் டிசைன்' ஆஸ்கர் விருது அறிவிப்பு: ராஜமவுலி மகிழ்ச்சி | சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவன் கல்யாண் மகன் | ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' |
சுசீந்திரன் இயக்கத்தில் விக்ராந்த் நடித்த 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்சாடா. பிறகு கதைப்படி ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் தேவையில்லை என்று, இப்படத்தில் அவர் நடித்திருந்த அனைத்துக் காட்சிகளையும் சுசீந்திரன் நீக்கினார். பின்னர் தெலுங்கில் பிசியான நடிகை ஆனார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தனுஷ் ஜோடியாக 'பட்டாஸ்' படத்தில் நடித்தார்.
தற்போது அவர் 'சுல்தான் ஆப் டெல்லி' என்ற இந்தி வெப்தொடரில் நடித்துள்ளார். ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இத்தொடரில் மவுனி ராய், விநய் பதக் உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் மெஹ்ரின் ஒரு பணக்கார குடும்பத்தின் தலைவனுக்கு ஆசை நாயகியாக நடித்துள்ளார். இதில் அவர் பாலியல் தொடர்பான படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார்.
இதுகுறித்து பலரும் மெஹ்ரினை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பணத்திற்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாமா என்று கேட்டு வருகிறார்கள். இதற்கு மெஹ்ரின் தனது சமூக வலைத்தளத்தில் அளித்துள்ள பதிலில், “திருமண பந்தத்தில் கணவனால் நடத்தப்படும் பாலியல் உறவு காட்சியில் நடித்திருக்கிறேன். பல பெண்கள் சந்திக்கும் தீவிரமான பிரச்னை இது. ஆனால், அதை 'ஆபாச காட்சி' என்று ஊடகங்கள் விவரிப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அந்த வார்த்தை தீவிரமான ஒன்றை சாதாரண விஷயமாக மாற்றி விடுகிறது. ஒரு நடிகையாக, அந்தக் கேரக்டருக்கு நியாயம் செய்வது என்னுடைய வேலை. எனவேதான் அந்தக் காட்சியில் நடித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.