20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
முன்னணி பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தமிழில் 'விவேகம்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களுக்கு வீடுகட்டி கொடுத்தார். விவேக் ஓபராய் நடிப்பதோடு அவ்வப்போது படத் தயாரிப்பிலும் ஈடுபடுவார். அதன்படி பாலிவுட் தயாரிப்பாளர் சாஹோடன் இணைந்து படங்களை தயாரித்து வந்தார்.
இந்த நிலையில் படத் தயாரிப்புக்காக தான் கொடுக்கும் பணத்தை நகைகள், மற்றும் இடங்கள் வாங்குவதில் சாஹோவும், அவரது மனைவி ராதிகா நந்தாவும் ஈடுபட்டு வந்துள்ளது விவேக் ஓபராய்க்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து விவேக் ஓபராய் மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். தான் கொடுத்த பணத்தில் ஒரு கோடியே 50 லட்சம் வரை சாஹோ கையாடல் செய்திருப்பதாகவும், அதனால் அவர்மீது கடும் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் மோடிச வழக்கு பதிவு செய்த போலீசார், சாஹோவை கைது செய்தனர். தலைமறைவான சாஹோவின் மனைவியை தேடி வருகிறார்கள்.