மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு |
முன்னணி பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தமிழில் 'விவேகம்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களுக்கு வீடுகட்டி கொடுத்தார். விவேக் ஓபராய் நடிப்பதோடு அவ்வப்போது படத் தயாரிப்பிலும் ஈடுபடுவார். அதன்படி பாலிவுட் தயாரிப்பாளர் சாஹோடன் இணைந்து படங்களை தயாரித்து வந்தார்.
இந்த நிலையில் படத் தயாரிப்புக்காக தான் கொடுக்கும் பணத்தை நகைகள், மற்றும் இடங்கள் வாங்குவதில் சாஹோவும், அவரது மனைவி ராதிகா நந்தாவும் ஈடுபட்டு வந்துள்ளது விவேக் ஓபராய்க்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து விவேக் ஓபராய் மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். தான் கொடுத்த பணத்தில் ஒரு கோடியே 50 லட்சம் வரை சாஹோ கையாடல் செய்திருப்பதாகவும், அதனால் அவர்மீது கடும் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் மோடிச வழக்கு பதிவு செய்த போலீசார், சாஹோவை கைது செய்தனர். தலைமறைவான சாஹோவின் மனைவியை தேடி வருகிறார்கள்.