சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

ஹிந்தித் திரையுலகத்தில் 1960, 70களில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்தவர் தேவ் ஆனந்த். அவருக்கு வட இந்தியாவில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. 2011ம் ஆண்டு தனது 88வது வயதில் மறைந்தார்.
பாலிவுட்டில் இருக்கும் பல நடிகர்களிலும் பல்வேறு முதலீடுகளில் ஈடுபடுவது வழக்கம். பிரம்மாண்ட வீடுகளை வாங்குவது, தொழில்களில் ஈடுபடுவது என செய்வார்கள். தேவ் ஆனந்த் உச்சத்தில் இருந்த போது மும்பையின் பல பகுதிகளில் வீடுகளை வாங்கியவர்.
அப்படி அவர் வாங்கிய, மும்பை ஜுஹு பகுதியில் உள்ள ஒரு பங்களா 400 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அவருடைய குடும்பத்தினர் அந்த பங்களாவை பிரபல ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்றிற்கு விற்றுள்ளார்களாம். அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி பணமும் கொடுக்கப்பட்டுவிட்டதாம். அந்த இடத்தில் 28 மாடியில் பிரம்மாண்ட குடியிருப்பு ஒன்றை கட்டப் போகிறார்களாம்.
தமிழ் சினிமாவிலும் தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் பலரும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை வாங்கிக் குவித்துள்ளவர்கள்தான்.