ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை | பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம் | சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம் | காஷ்மீரில் அமைதியை கெடுப்பவர்களுக்கு கடும் தண்டனை : ரஜினி வேண்டுகோள் |
ஹிந்தித் திரையுலகத்தில் 1960, 70களில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்தவர் தேவ் ஆனந்த். அவருக்கு வட இந்தியாவில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. 2011ம் ஆண்டு தனது 88வது வயதில் மறைந்தார்.
பாலிவுட்டில் இருக்கும் பல நடிகர்களிலும் பல்வேறு முதலீடுகளில் ஈடுபடுவது வழக்கம். பிரம்மாண்ட வீடுகளை வாங்குவது, தொழில்களில் ஈடுபடுவது என செய்வார்கள். தேவ் ஆனந்த் உச்சத்தில் இருந்த போது மும்பையின் பல பகுதிகளில் வீடுகளை வாங்கியவர்.
அப்படி அவர் வாங்கிய, மும்பை ஜுஹு பகுதியில் உள்ள ஒரு பங்களா 400 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அவருடைய குடும்பத்தினர் அந்த பங்களாவை பிரபல ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்றிற்கு விற்றுள்ளார்களாம். அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி பணமும் கொடுக்கப்பட்டுவிட்டதாம். அந்த இடத்தில் 28 மாடியில் பிரம்மாண்ட குடியிருப்பு ஒன்றை கட்டப் போகிறார்களாம்.
தமிழ் சினிமாவிலும் தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் பலரும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை வாங்கிக் குவித்துள்ளவர்கள்தான்.