ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். தற்போது தமிழில் ‛சந்திரமுகி 2' படத்திலும், ஹிந்தியில் முன்னாள் பிரதமர் இந்திரா காலக்கட்டத்தில் நடந்த எமெர்ஜென்சி சம்பவத்தை மையமாக கொண்ட ‛எமெர்ஜென்சி' படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தியா முழுக்க ஏராளமான தியேட்டர்களை கொண்டுள்ள பிவிஆர் குழுமத்திற்கு இந்தாண்டு 333 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நாடு முழுக்க 50 தியேட்டர்களை மூட முடிவெடுத்து இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா, "நம் நாட்டிற்கு இன்னும் அதிகமான தியேட்டர்கள் தேவைப்படுகின்றன. அப்படியிருக்கும் சூழலில் தியேட்டர்களை மூடுவது திரைத்துறைக்கு நல்லதல்ல. அதேசமயம், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குடும்பத்துடன் படம் பார்க்க தங்களின் சம்பளத்தின் பெரும் பகுதியைச் செலவிட வேண்டி இருக்கிறது. இந்த நிலையை சரி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.