பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். தற்போது தமிழில் ‛சந்திரமுகி 2' படத்திலும், ஹிந்தியில் முன்னாள் பிரதமர் இந்திரா காலக்கட்டத்தில் நடந்த எமெர்ஜென்சி சம்பவத்தை மையமாக கொண்ட ‛எமெர்ஜென்சி' படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தியா முழுக்க ஏராளமான தியேட்டர்களை கொண்டுள்ள பிவிஆர் குழுமத்திற்கு இந்தாண்டு 333 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நாடு முழுக்க 50 தியேட்டர்களை மூட முடிவெடுத்து இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா, "நம் நாட்டிற்கு இன்னும் அதிகமான தியேட்டர்கள் தேவைப்படுகின்றன. அப்படியிருக்கும் சூழலில் தியேட்டர்களை மூடுவது திரைத்துறைக்கு நல்லதல்ல. அதேசமயம், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குடும்பத்துடன் படம் பார்க்க தங்களின் சம்பளத்தின் பெரும் பகுதியைச் செலவிட வேண்டி இருக்கிறது. இந்த நிலையை சரி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.