காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். தற்போது தமிழில் ‛சந்திரமுகி 2' படத்திலும், ஹிந்தியில் முன்னாள் பிரதமர் இந்திரா காலக்கட்டத்தில் நடந்த எமெர்ஜென்சி சம்பவத்தை மையமாக கொண்ட ‛எமெர்ஜென்சி' படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தியா முழுக்க ஏராளமான தியேட்டர்களை கொண்டுள்ள பிவிஆர் குழுமத்திற்கு இந்தாண்டு 333 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நாடு முழுக்க 50 தியேட்டர்களை மூட முடிவெடுத்து இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா, "நம் நாட்டிற்கு இன்னும் அதிகமான தியேட்டர்கள் தேவைப்படுகின்றன. அப்படியிருக்கும் சூழலில் தியேட்டர்களை மூடுவது திரைத்துறைக்கு நல்லதல்ல. அதேசமயம், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குடும்பத்துடன் படம் பார்க்க தங்களின் சம்பளத்தின் பெரும் பகுதியைச் செலவிட வேண்டி இருக்கிறது. இந்த நிலையை சரி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.