உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் |

இந்திய சினிமா என்றால் ஹிந்தி சினிமா என சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. 'பாகுபலி 2, புஷ்பா, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் வெளிவந்த பின்பு தென்னிந்தியத் திரைப்படங்களும் இந்தியப் படங்கள் என்ற பெயரை உலக அரங்கில் அழுத்தமாகப் பதிவு செய்தன.
ஹிந்திப் படங்கள் செய்யாத வசூல் சாதனையை இந்திய அளவில் 'பாகுபலி 2' படம் செய்தது. அந்தப் படம் இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக 510 கோடியை வசூலித்திருந்தது. கடந்த ஆறு வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்த அந்த சாதனையை 'பதான்' படம் தற்போது முறியடித்துள்ளது.
பாலிவுட்டின் இழந்த பெருமையை 'பதான்' படமும் ஷாருக்கானும் மீட்டுவிட்டதாக ஹிந்தித் திரையுலகினர் மகிழ்ந்துள்ளனர். அதே சமயம் ஷாருக்கானைப் போல மற்ற ஹீரோக்களின் படங்களும் தென்னிந்தியப் படங்களை மீறி வசூலிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.




