மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
மராத்தி சினிமாவில் முன்னணியில் இருப்பவர் சோனாலி குல்கர்னி. ஹிர்கனி, விக்டோரியாக என சமீபத்தில் வெளியான படங்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்கிற பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.
அவர் தற்போது அங்கமாலி டைரிஸ் மற்றும் க்ஜல்லிக்கட்டு, நண்பகல் நேரத்து மயக்கம் படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் அடுத்த படமான 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கு வருகிறார். இப்படத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார்.
இது குறித்து சோனாலி கூறியதாவது: இது நான் எதிர்பார்க்காத ஒன்று. தென்னிந்திய சினிமாவுக்கு செல்வேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. நான் மலையாள படங்களை விரும்பி பார்ப்பேன். சமீபகாலமாக லிஜோவின் படங்களை கவனித்து வருகிறேன். மோகன்லாலை ஒரு கமர்ஷியல் ஹீரோவாகத் தெரியும். இவர்களோடு இணைவது எனக்கு பெரிய கவுரவம்.
சினிமாவின் மாநில எல்லைகள் மறைந்து நாம் அனைவரும் இந்தியத் திரைப்படத் துறையாக அடையாளப்படுத்திக் கொள்கிறோம். இந்த படம் பீரியட் டிராமா. இதற்காக தற்போது ஒர்க்கவுட் செய்து வருகிறேன். இதுகுறித்து மோகன்லாலிடம் பேசினேன். அவர் மலையாளம் கற்றுக் கொள்ளச் சொன்னார். அதையும் செய்ய இருக்கிறேன். என்றார்.