ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் |
மும்பை : 'புதுடில்லியைச் சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம் பெண் காதலனால் படுகொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் என்னை பாதித்ததால், காதலை கைவிட முடிவெடுத்தேன்' என, தற்கொலை செய்த நடிகை துனிஷா சர்மாவின் காதலன் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.
ஹிந்தி, 'டிவி' தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை துனிஷா சர்மா, 20. இவர் தன்னுடன் நடித்து வந்த ஷீசான் கான், 28, என்பவரை காதலித்தார். கடந்த 24ம் தேதி, மும்பையின் வாலிவ் என்ற இடத்தில் நடந்த படப்பிடிப்பு இடைவேளையின் போது, துனிஷா 'மேக்கப்' அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரை காதலித்து வந்த நடிகர் ஷீசான் கான், திருமணம் செய்து கொள்ள மறுத்ததை அடுத்து துனிஷா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் வனிதா போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து ஷீசான் கான் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
முதல் நாள் போலீஸ் விசாரணையின் போது நடிகர் ஷீசான் கான் கூறியதாவது: புதுடில்லியைச் சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம் பெண்ணை, அவரது காதலன் அப்தாப் பூனாவாலா கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசி எறிந்தார். இதை, 'லவ் ஜிகாத்' என, பல்வேறு அரசியல் கட்சியினரும் விமர்சனம் செய்தனர். இந்த சம்பவம் என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. எனவே, துனிஷாவிடம் இருந்த விலகி இருக்க முடிவு செய்து, இதை அவரிடம் தெரிவித்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பே துனிஷா தற்கொலைக்கு முயன்றார். நான் தான் அவரை காப்பாற்றினேன். அவரை கண்காணிக்கும்படி அவரது தாயிடம் தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.