மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள பெடியா என்கிற திரைப்படம் நாளை (நவ-25) வெளியாக உள்ளது. தமிழிலும் இந்த படம் ஓநாய் என்கிற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் வருண் தவான். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, சானியா மிர்சா குறித்து ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை கூறினார்.
“சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக, முதன்முதலாக ஒரு விளம்பர படத்தில் நடித்தபோது முதல் சம்பளமாக 5000 ரூபாய் கிடைத்தது. அந்த சமயத்தில் சானியா மிர்சாவுடன் நட்பாக பழகி வந்தேன். அப்போது எனக்கு போன் செய்த சானியா, ஆப்பிள் வாங்கி வருமாறு கூறினார். நானும் ஆப்பிளை வாங்கி கொண்டு அவரது வீட்டிற்கு சென்றபோது, கதவைத் திறந்த அவரது அம்மா என் மகள் ஆப்பிள் சாப்பிட மாட்டாளே, யாருக்காக வாங்கி வந்தாய் என்று சத்தம் போட்டார். அப்போது பின்னாலிருந்து வந்த சானியா மிர்சா நான் தான் வாங்கி வரச்சொன்னேன் என கூறிய பின்னரே அவரது அம்மா சமாதானம் அடைந்தார்” என்று கூறினார் வருண் தவான்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சானியா மிர்சா தனது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரருமான சோயப் மாலிக்கை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக பரபரப்பான செய்திகள் வெளியான நிலையில், சானியாவுக்கும் தனக்குமான நட்பு குறித்து இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது இந்த தகவலை கூறியுள்ளார் வருண் தவான்.