காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு |
பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள பெடியா என்கிற திரைப்படம் நாளை (நவ-25) வெளியாக உள்ளது. தமிழிலும் இந்த படம் ஓநாய் என்கிற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் வருண் தவான். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, சானியா மிர்சா குறித்து ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை கூறினார்.
“சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக, முதன்முதலாக ஒரு விளம்பர படத்தில் நடித்தபோது முதல் சம்பளமாக 5000 ரூபாய் கிடைத்தது. அந்த சமயத்தில் சானியா மிர்சாவுடன் நட்பாக பழகி வந்தேன். அப்போது எனக்கு போன் செய்த சானியா, ஆப்பிள் வாங்கி வருமாறு கூறினார். நானும் ஆப்பிளை வாங்கி கொண்டு அவரது வீட்டிற்கு சென்றபோது, கதவைத் திறந்த அவரது அம்மா என் மகள் ஆப்பிள் சாப்பிட மாட்டாளே, யாருக்காக வாங்கி வந்தாய் என்று சத்தம் போட்டார். அப்போது பின்னாலிருந்து வந்த சானியா மிர்சா நான் தான் வாங்கி வரச்சொன்னேன் என கூறிய பின்னரே அவரது அம்மா சமாதானம் அடைந்தார்” என்று கூறினார் வருண் தவான்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சானியா மிர்சா தனது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரருமான சோயப் மாலிக்கை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக பரபரப்பான செய்திகள் வெளியான நிலையில், சானியாவுக்கும் தனக்குமான நட்பு குறித்து இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது இந்த தகவலை கூறியுள்ளார் வருண் தவான்.