
ஹிருத்திக் ரோஷன் எடுத்த புதிய முடிவு
இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷன் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், விக்ரம் வேதா படத்தில் நடித்தது திருப்தியாக உள்ளது. ரசிகர்களும் இந்த படத்தை ஏற்றுக் கொண்டார்கள். இதையடுத்து பைட்டர் என்ற படத்தில் தீபிகா படுகோனேவுடன் இணைந்து நடிக்கிறேன். இந்த படமும் விக்ரம் வேதா படத்தைப் போலவே அழுத்தமான கதையில் உருவாகி வருகிறது என்று கூறியுள்ள ஹிருத்திக் ரோஷன், இனிமேல் இதுபோன்று அழுத்தமான கதைகள் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். வலுவில்லாத கதைகளில் நடிக்க மாட்டேன். அதனால் இனிமேல் நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய படங்களாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!