தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
தமிழில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் விக்ரம் வேதா. இந்த படம் தற்போது அதே பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த 30 ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது. ஹிருத்திக் ரோஷன், சையூப் அலிகான் இணைந்து நடித்துள்ள இந்த படத்தையும் தமிழில் விக்ரம் வேதாவை இயக்கிய புஷ்கர் காயத்ரியே இயக்கி உள்ளார்கள். இந்த படம் கடந்த மூன்று தினங்களில் ரூ.40 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷன் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், விக்ரம் வேதா படத்தில் நடித்தது திருப்தியாக உள்ளது. ரசிகர்களும் இந்த படத்தை ஏற்றுக் கொண்டார்கள். இதையடுத்து பைட்டர் என்ற படத்தில் தீபிகா படுகோனேவுடன் இணைந்து நடிக்கிறேன். இந்த படமும் விக்ரம் வேதா படத்தைப் போலவே அழுத்தமான கதையில் உருவாகி வருகிறது என்று கூறியுள்ள ஹிருத்திக் ரோஷன், இனிமேல் இதுபோன்று அழுத்தமான கதைகள் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். வலுவில்லாத கதைகளில் நடிக்க மாட்டேன். அதனால் இனிமேல் நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய படங்களாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.