பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் சினிமாவில் 2010ம் ஆண்டு பாண்ட் பாஜா பாரத் என்ற படத்தில் அறிமுகமானவர் ரன்வீர் சிங். அதையடுத்து 2015 ஆம் ஆண்டு தீபிகா படுகோனே உடன் இணைந்து அவர் நடித்த பஜ்ரவ் மஸ்தானி என்ற படமும், 2019ம் ஆண்டு நடித்த கல்லி பாய் என்ற படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. நடிகை தீபிகாவை திருமணம் செய்துள்ள இவர் படங்களில் பிஸியாக நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஒரு மேகஸினுக்காக நிர்வாணமாக போட்டோ சூட் நடத்தி அதிர்ச்சி தந்துள்ளார் ரன்வீர் சிங். இது பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி உள்ளது.
ரன்வீர் கூறுகையில், 'நடிப்பிற்காக நான் இதற்கு முன் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளேன், அதில் என் ஆன்மா வெளிப்பட்டது. தற்போதும் ஆயிரம் பேருக்கு முன்னால் என்னால் நிர்வாணமாக இருக்க முடியும், ஆனால் அது அவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் அதனால் அதை நான் செய்ய மாட்டேன்' என ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த போட்டோ ஷூட்டை பார்த்து ரசிகர்கள் சகட்டுமேனிக்கு கருத்து பதிவிட்டுள்ளனர்.