ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் நேற்று முன்தினம் தான் கர்ப்பம் அடைந்துள்ளதாக அறிவித்திருந்தார். ஏப்ரல் மாதம் 14ம் தேதி நடிகர் ரன்பீர் கபூரைத் திருமணம் செய்து கொண்ட ஆலியா இரண்டு மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருப்பது பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்பே ஆலியா கர்ப்பம் அடைந்திருப்பார் என பாலிவுட் மீடியாக்கள் சில செய்திகளை வெளியிட்டுள்ளன.
பாலிவுட்டில் இது ஒன்றும் புதிதல்ல என்றும் இதற்கு முன்பும் சில நடிகைகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைந்துள்ளார்கள் என்றும் ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளார்கள். நேஹா தூப்பியா, கொன்கனா சென் சர்மா, ஸ்ரீதேவி, சரிகா, செலினா ஜெட்லி, அம்ரிதா அரோரா ஆகியோர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான சிலர்.
பொதுவாக பெண்கள் கர்ப்பம் அடைந்தால் நான்கைந்து மாதங்கள் கழித்தே அது பற்றி வெளியில் சொல்வார்கள். ஆனால், ஆலியா பட் இரண்டு மாதங்களில் அது பற்றி சொல்லியிருப்பதுதான் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.