தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் நேற்று முன்தினம் தான் கர்ப்பம் அடைந்துள்ளதாக அறிவித்திருந்தார். ஏப்ரல் மாதம் 14ம் தேதி நடிகர் ரன்பீர் கபூரைத் திருமணம் செய்து கொண்ட ஆலியா இரண்டு மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருப்பது பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்பே ஆலியா கர்ப்பம் அடைந்திருப்பார் என பாலிவுட் மீடியாக்கள் சில செய்திகளை வெளியிட்டுள்ளன.
பாலிவுட்டில் இது ஒன்றும் புதிதல்ல என்றும் இதற்கு முன்பும் சில நடிகைகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைந்துள்ளார்கள் என்றும் ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளார்கள். நேஹா தூப்பியா, கொன்கனா சென் சர்மா, ஸ்ரீதேவி, சரிகா, செலினா ஜெட்லி, அம்ரிதா அரோரா ஆகியோர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான சிலர்.
பொதுவாக பெண்கள் கர்ப்பம் அடைந்தால் நான்கைந்து மாதங்கள் கழித்தே அது பற்றி வெளியில் சொல்வார்கள். ஆனால், ஆலியா பட் இரண்டு மாதங்களில் அது பற்றி சொல்லியிருப்பதுதான் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.