தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் நேற்று முன்தினம் தான் கர்ப்பம் அடைந்துள்ளதாக அறிவித்திருந்தார். ஏப்ரல் மாதம் 14ம் தேதி நடிகர் ரன்பீர் கபூரைத் திருமணம் செய்து கொண்ட ஆலியா இரண்டு மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருப்பது பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்பே ஆலியா கர்ப்பம் அடைந்திருப்பார் என பாலிவுட் மீடியாக்கள் சில செய்திகளை வெளியிட்டுள்ளன.
பாலிவுட்டில் இது ஒன்றும் புதிதல்ல என்றும் இதற்கு முன்பும் சில நடிகைகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைந்துள்ளார்கள் என்றும் ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளார்கள். நேஹா தூப்பியா, கொன்கனா சென் சர்மா, ஸ்ரீதேவி, சரிகா, செலினா ஜெட்லி, அம்ரிதா அரோரா ஆகியோர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான சிலர்.
பொதுவாக பெண்கள் கர்ப்பம் அடைந்தால் நான்கைந்து மாதங்கள் கழித்தே அது பற்றி வெளியில் சொல்வார்கள். ஆனால், ஆலியா பட் இரண்டு மாதங்களில் அது பற்றி சொல்லியிருப்பதுதான் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.