'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டிக்கு ஆபாச படங்களை தயாரித்த விவாகரத்தில் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சினிமா வாழ்க்கையே திசை மாறிப்போனது. இந்த நிலையில் கடுமையான வாழ்க்கை சூழலில் இருந்து மீண்டு நடிப்பில் பிசியாகி இருக்கிறார். ஆம்... முதன்முறையாக ஓடிடியில் அறிமுகமாகப் போகிறார் ஷில்பா ஷெட்டி.
‛இண்டியன் போலீஸ் போர்ஸ்' என்ற தொடரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதில் சித்தார்த் மல்கோத்ராவும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்திய காவல்துறை சிக்கலான பல வழக்குகளை எப்படி கையாண்டது என்பது குறித்து இந்த தொடர் உருவாகி உள்ளது. இதில் இந்தியா முழுக்க நடந்த பல குற்றச் சம்பவங்களும், அதில் போலீசின் செயல்பாடுகளும் இடம்பெறுகிறது.