அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
போட்டி அதிகம் நிறைந்த பாலிவுட் திரையுலகில் ஒரு முன்னணி ஹீரோவாக நீண்ட காலம் நிலைத்து நிற்பது கடினமான விஷயம். ஆனால் நடிகர் அஜய் தேவ்கன் பாலிவுட்டில் தனது திரையுலக பயணத்தில் 30ம் வருடத்தை தொட்டு இன்றைக்கும் முன்னணி ஹீரோவாகவே வலம் வருகிறார். இதைதொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் ராஜமவுலியும் அஜய் தேவ்கனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..
“அர்ப்பணிப்பு உணர்வமும் சினிமா மீதான ஆர்வமும் கொண்டு முப்பது வருடத்தை கடந்து சாதனை செய்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்.. இந்த பயணத்தில் உங்களுடன் மக்கி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களில் இணைந்து பணியாற்றியதில் பெருமிதப்படுகிறேன்” என கூறியுள்ளார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, ராஜமவுலியின் ஈகா படம் இந்தியில் மக்கி என்கிற பெயரில் வெளியானபோது அதில் ஈக்காக குரல் கொடுத்தவர் அஜய் தேவ்கன் தான்.