வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் | மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் |

போட்டி அதிகம் நிறைந்த பாலிவுட் திரையுலகில் ஒரு முன்னணி ஹீரோவாக நீண்ட காலம் நிலைத்து நிற்பது கடினமான விஷயம். ஆனால் நடிகர் அஜய் தேவ்கன் பாலிவுட்டில் தனது திரையுலக பயணத்தில் 30ம் வருடத்தை தொட்டு இன்றைக்கும் முன்னணி ஹீரோவாகவே வலம் வருகிறார். இதைதொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் ராஜமவுலியும் அஜய் தேவ்கனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..
“அர்ப்பணிப்பு உணர்வமும் சினிமா மீதான ஆர்வமும் கொண்டு முப்பது வருடத்தை கடந்து சாதனை செய்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்.. இந்த பயணத்தில் உங்களுடன் மக்கி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களில் இணைந்து பணியாற்றியதில் பெருமிதப்படுகிறேன்” என கூறியுள்ளார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, ராஜமவுலியின் ஈகா படம் இந்தியில் மக்கி என்கிற பெயரில் வெளியானபோது அதில் ஈக்காக குரல் கொடுத்தவர் அஜய் தேவ்கன் தான்.




