ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சினிமா நடிகை டெல்னா டேவிஸ் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் அன்பே வா தொடரில் மெயின் ரோலில் நடித்து வருகிறார். ஆனால், சில தினங்களுக்கு முன் ஸ்ரீகோபிகா என்ற இரண்டாவது நாயகியை சீரியலுக்குள் அறிமுகப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை திரைக்கதையில் அதிகப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் பூமிகா கதாபாத்திரம் இறந்துவிடுவது போல் காண்பித்தனர். இதன் காரணமாக டெல்னா டேவிஸ் சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் கசிந்தது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள டெல்னா டேவிஸ், 'அன்பே வா தொடரிலிருந்து விடைபெறுவதை நினைக்கும் போது இதயம் உணர்ச்சிகளாலும், நன்றியாலும் நிரம்பி வழிகிறது. இதுவெறும் குட்பை மட்டுமல்ல. உங்கள் அன்பிற்கும் நீங்கள் கொடுத்த அனைத்து நினைவுகளுக்கும் நன்றி. என் வாழ்வில் ஒரு அத்தியாயமாக அன்பே வா தொடரின் அழகான நினைவுகள் இருக்கும். சைனிங் ஆப் பூமிகா' என்று பதிவிட்டுள்ளார்.




