சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி | வெற்றி இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகர் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க இருந்த கதையில் நடிகர் ரஜினிகாந்த் | அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? | 'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி |

பிரபல நடிகை மற்றும் வீஜேவான ஸ்வர்ணமால்யா ஒரு காலத்தில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த கனவு கன்னியாக வலம் வந்தார். சினிமாவிலும் சின்னத்திரை சீரியல்களிலும் பல முக்கிய ரோல்களில் நடித்து வந்தார். தற்போது திரைத்துறையை விட்டு ஒதுங்கியிருக்கும் ஸ்வர்ணமால்யா பரதநாட்டிய பள்ளியை ஆரம்பித்து பரதம் கற்றுக்கொடுத்து வருகிறார்.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சோசியல் மீடியா மிகவும் வக்கிரமாக இருப்பதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'சோசியல் மீடியாவில் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் பாதுகாப்பு இல்லை. மற்றவருக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை பேசினால் 25 பேராவது கழுவி ஊற்றுவார்கள். முகத்தை மூடிக்கொண்டு கோழைத்தனமாக சண்டை போடுகிறார்கள். இளம் வயதினரை இது அதிகம் பாதிக்கிறது. முன்கூட்டியே தப்பாக எடை போட்டு கமெண்ட் செய்கிறார்கள். இப்போது உள்ள காலத்தில் யாருக்கும் தனி மனித ஒழுக்கம் இல்லை. இந்த சமுதாயம் வக்கிரமாக மாறிக்கொண்டு வருகிறது' என்று கூறியுள்ளார்.




