'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

பிக்பாஸ் சீசன் 6ல் அதிகம் கவனம் பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் சின்னத்திரை நடிகை ரச்சிதா மஹாலெட்சுமி. இறுதிப்போட்டிவரை நிச்சயமாக செல்வார் என அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் சொல்லிக்கொள்ளும் வகையில் கேமை விளையாடவில்லை. அழகுபதுமையாக வெகேஷனுக்கு சென்றது போல் பிக்பாஸ் வீட்டில் சுற்றித்திரிந்து பலரும் விமர்சிக்கும் வகையில் நடந்து கொண்டார் என்பது பலரின் விமர்சனமாக இருந்தது. இறுதியில், கடந்தவார எவிக்ஷனில் வெளியேறினார்.
இந்நிலையில், வெளியே வந்துள்ள ரச்சிதாவுக்கு நண்பர்களும் ரசிகர்களும் சேர்ந்து ஏகபோக வரவேற்பை கொடுத்துள்ளனர். வீட்டிற்கு ரச்சிதா வருகையில் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து ஆளுயர ரோஜாப்பூமாலையும் அணிவித்து வரவேற்றுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களால் அவரது வீட்டையும் அலங்கரித்து, மக்களின் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர். மேலும், ரச்சிதாவை பற்றி 'அவள் ஒரு சபிக்கப்பட்ட தேவதை' என்ற அழகிய கவிதையையும் பதிவிட்டுள்ளனர். இவையனைத்தும் அழகிய வீடியோவாக தொகுக்கப்பட்டு 'வா தலைவி வா' என பில்டப் சாங்குடன் வெளியாகி ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
இதைபார்க்கும் சிலர் 'ரச்சிதா எப்படி என்ன சாதிச்சிட்டாங்கன்னு இவ்வளவு பில்டப்பு?' என கேட்டு வந்தாலும், ரசிகர்களோ ரச்சிதாவை கொண்டாடி வருகின்றனர்.




