விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் | ஆந்தாலஜி கதையில் உருவாகும் 'வவ்வல்ஸ்' | 40 படங்களில் போலீசாக நடித்த சமுத்திரக்கனி | விதார்த்தின் புதிய படம் 'தொடக்கம்' | பிளாஷ்பேக்: சிரஞ்சீவிக்கு கொடுத்த வாக்கை 9 வருடங்களுக்கு பிறகு காப்பாற்றிய பாரதிராஜா | ஏஆர் ரஹ்மானின் தெலுங்கு 'பெத்தி' பாடல் புதிய சாதனை |

எதிர்நீச்சல் தொடர் அவ்வப்போது சில சர்ச்சைகள் எழுந்து வருகிறது. முன்னதாக போட்டோகிராபர்களை இழிவுப்படுத்தியதாகவும், நடைமுறையில் இல்லாததை மிகைப்படுத்தி சொல்வதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து ஏற்கனவே சீரியல் குழுவினர் விளக்கமளித்திருந்தனர்.
இந்நிலையில், அண்மையில் சிலர் இயக்குநர் திருசெல்வத்திடம் எதிர்நீச்சல் சீரியல் குறித்து சில கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதில், 'படித்த பெண்களை ஏன் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்க பார்க்கிறீர்கள்? இது போன்று இப்போதும் நடக்கிறதா?' என சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு பதிலளித்துள்ள திருசெல்வம், 'இதுபோன்ற சம்பவங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நகர்ப்புறங்களில் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். கிராமப்புறங்களில் படித்த பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. என்னுடைய அனுபவத்திலிருந்து நான் இப்படி ஒரு கதையை எடுத்து இருக்கிறேன். இது என் வீட்டிலும் நான் பார்த்த பலர் வீட்டிலும் பெண்களுக்கு நடந்து இருக்கிறது. பெண்களை வீட்டிற்குள் அடைத்து வைப்பது என் நோக்கம் அல்ல. அப்படி அவர்களை நிர்பந்தித்து அடைத்து வைக்கும் போது அவர்கள் எடுக்கும் முடிவு பற்றி தான் இந்த சீரியலின் கருத்து இருக்கிறது' என்று கூறியுள்ளார்.
'எதிர்நீச்சல்' தொடர் ஒளிபரப்பான முதல் நாள் முதல் இப்போது வரை சீரியல் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக குடும்ப பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது கதாநாயகியின் தைரியமான எழுச்சியுடன் விறுவிறுப்பான அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.




