கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தொகுப்பாளினியாக களமிறங்கிய ஐஸ்வர்யா, சூப்பர் குடும்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு சிவாகார்த்திகேயனுடன் ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் நடனமாடி அசத்தி பிரபலமானார். தொடந்து வீஜே, சீரியல் நடிகை என சிறகடிந்த பறந்த ஐஸ்வர்யாவை தேவதையாக நினைத்து சுற்றி வந்த ரசிகர் கூட்டம் ஏராளம்.
இந்நிலையில் அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பின் திரையில் தோன்றாவிட்டாலும் சோஷியல் மீடியாக்களில் தன் வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சியான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமீபத்தில் தெரிவித்திருந்த அவர், தற்போது மற்ற சீரியல் நடிகைகள் போலவே போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தனது கர்ப்பமான வயிற்றில் பூமி போன்ற பெயிண்டிங் வரைந்து, மேலே ஒருபுறம் சந்திரனையும் மறுபுறம் சூரியனையும் வைத்து, உடல் முழுவதும் செடி கொடிகளை சுற்றிக் கொண்டு 'இயற்கை தாய்' என்பதை குறிப்பாக காட்டும் வகையில் போட்டோ எடுத்துள்ளார்.
வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டீசன்கள் ஐஸ்வர்யாவின் கலை ஆர்வத்தை கலாய்ப்பதா அல்லது குழந்தைக்காக வாழ்த்துகள் சொல்வதா என்ற தெரியாமல் குழப்பத்துடன் சுற்றி வருகின்றனர்.