சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
சித்த மருத்துவர் கே.வீரபாபு எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும், ‛முடக்கறுத்தான்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இப்படத்திற்கு சிற்பி இசையமைக்க, பழனிபாரதி பாடல் எழுதுகிறார். இவர்கள் கூட்டணி நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் சேர்ந்துள்ளது.
வீரபாபு பேசியதாவது: சின்ன வயதிலேயே சினிமா மீது ஆர்வம் அதிகம். இந்தத் துறையிலும் சாதிக்க நினைத்தேன், அது நிஜமாகி உள்ளது. குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்கள் பற்றிய கதையே ‛முடக்கறுத்தான்'. குழந்தைகளுக்கான ஒரு அமைப்பு, திட்டம் உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசை. குழந்தைகளுக்கான பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அது இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.