சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் ஆகிய ஹிந்தி, தெலுங்கு, கன்னட சினிமா உலகில் போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது பற்றிய பல துறைகளின் விசாரணை தீவிரமடைந்து வருகிறது.
தற்போது அமலாக்கப் பிரிவு இது குறித்த விசாரணையை தெலுங்குத் திரையுலக பிரபலங்களிடம் நடத்தி வருகிறது. தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்னாத் நேற்று விசாரணைக் குழுவினர் முன் ஆஜரானார். இந்த வழக்கில் 12 தெலுங்கு சினிமா பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர்களிடம் 2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. நேற்று அவற்றை பூரி ஜெகன்னாத் விசாரணைக் குழுவிடம் அளித்துள்ளார். நேற்று அவரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இன்று பூரி ஜெகன்னாத் உடன் சினிமா தயாரிப்பாளராக இருக்கும் நடிகை சார்மி அமலாக்கப் பிரிவு முன் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். நான்கு வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு விசாரணைக்கு ஆஜராகும் போது காவலர் ஒருவர் தன்னைத் தொட்டார் என்ற குற்றச்சாட்டை எழுப்பினார் சார்மி. அதனால், இந்த முறை முழுவதும் பெண் காவலர்களை பாதுகாப்பிற்கு நிறுத்த உள்ளார்களாம்.
இந்த விசாரணை விவகாரங்களால் டோலிவுட்டில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.