சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
திருமணம் குறித்து தன்னிடம் கேள்வி கேட்ட ரசிகைக்கு திருமணம் என்பது வெறும் நம் இணையரின் தோற்றம், பணம், குழந்தை போன்ற காரணிகளை மட்டுமே வைத்து தேர்வு செய்யக் கூடியதல்ல என ஸ்ருதி அறிவுரை கூறியுள்ளார்.
பிரபல நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி. தொழில்முறை சமையல் கலைஞரான இவர் சொந்தமாக ஆன்லைன் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். கர்ப்பமாக இருந்த போது மெட்டர்னிட்டி போட்டோ ஷூட், குழந்தை பிறந்த பிறகு ஜோடியாக இருவரும் அளித்த பேட்டிகளின் மூலம் ஸ்ருதியை பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
ஸ்ருதியும் தனக்கு தெரிந்த பொதுவான விஷயங்களையும், தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலையும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்தார். அந்த வகையில் ஸ்ருதியின் ரசிகை ஒருவர், எனக்கு திருமணமாக போகிறது. எனக்கு அவரை மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், என் பார்ட்னர் என்னை விட உயரம் குறைவு. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு எதாவது அறிவுரை கூறுங்கள் எனக் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஸ்ருதி, ஸ்டீரியோடைப்பை ப்ரேக் செய்வது சுலபமான காரியமல்ல. சிறு வயதிலிருந்தே நமக்குள் புகுத்தப்பட்ட விஷயம். அதிலிருந்து ஒரு மணி நேரத்தில் வெளிவந்து விட முடியாது என கூறியுள்ளார். மேலும், அழகான முடி வைத்திருக்கும் நபரை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திருமணத்திற்கு பின் அவருக்கு முடி கொட்டும் பிரச்சனை வந்தால் அந்த காதல் போய்விடுமா?. அது போலதான் திருமணம் என்பது வெறும் புறத்தோற்றம், பணம், குழந்தை என்பதை மட்டுமே வைத்து தேர்வு செய்யக் கூடியதல்ல. சிந்தித்து பாருங்கள் என அறிவுரை கூறி தனது இண்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.