இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று பிரசாத் லேப்பில் நடந்தது. இதில் டைமண்ட் பாபு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அவரது அணியை சேர்ந்த வீ.கே. சுந்தர், துணை தலைவராகவும், யுவராஜ் செயலாளராகவும், கணேஷ்குமார், முத்துராமலிங்கம் இணை செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எதிர் அணியை சேர்ந்த கோவிந்தராஜ் துணை தலைவராகவும், குமரேசன் பொருளாளராகவும் தேர்வு பெற்றார்கள்.
இவர்கள் தவிர ஆறுமுகம், புவன், தர்மா, இனியன், கிளாமர் சத்யா, சாவித்ரி, ராஜேஷ்,வெங்கட், திரைநீதி செல்வம். ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வானார்கள். மூத்த மக்கள் தொடர்பாளர்கள் விபி மணி, கண்ணதாசன், பாரிவள்ளல் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினார்கள்.




