
தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் : அமைதியான பிரகாஷ்ராஜ்
அதையடுத்து பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவு குரல்களும் ஒலித்தன. இந்த நிலையில், பிரகாஷ்ராஜூம்,விஷ்ணு மஞ்சும் தங்கள் அணிகள் வெற்றி பெற்றால் நடிகர் சங்கத்துக்கு என்னென்ன நலத்திட்டங்களை செய்வோம் என்பது குறித்த வாக்குறுதிகளை அளிப்பதில் போட்டா போட்டியிலும் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது திடீரென்று அமைதியாகி விட்ட நடிகர் பிரகாஷ்ராஜ், இனிமேல் நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் பிரச்சாரம் மட்டுமின்றி தேர்தல் வாக்குறுதி சம்பந்தமாகவும் பேசுவேன் என்று கூறி வருகிறாராம். அதன்காரணமாக மற்றவர்கள் தனக்கு எதிராக வெளியிடும் அறிக்கைகளுக்கும் எந்தவித பதிலும் கொடுக்காமல் அமைதி காத்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!