ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழில் 2013ம் ஆண்டில் வெளிவந்த மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகையான சுர்வீன் சாவ்லா. அதன்பின் புதிய திருப்பங்கள், ஜெய் ஹிந்த் 2 உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் சில ஹிந்தி, பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது சினிமா வாழ்க்கையில் நடிப்புக்காகப் படுக்கை (Casting Couch) என்பதை எப்படி எதிர்கொண்டார் எனச் சொல்லியிருக்கிறார்.
“நடிப்புக்காகப் படுக்கை என்பதை நான் மூன்று முறை அனுபவித்திருக்கிறேன். ஒரு முறை ஒரு இயக்குனரை சந்திக்கச் சொன்னார்கள். அவர் எனது உடலின் ஒவ்வொரு இன்ச்சையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். அதன்பின் அவர்கள் தொலைபேசியில் அழைத்தால் எடுப்பதில்லை.
அடுத்து தென்னிந்தியாவில் ஒரு தேசிய விருது பெற்ற இயக்குனர் அழைத்தார். அங்கு நீண்ட நேரம் ஆடிஷன் செய்தார்கள். எனக்கு அன்று உடல்நிலை சரியில்லை, எனவே, திரும்பிவிட்டேன். அந்த இயக்குனருக்கு தமிழைத் தவிர ஆங்கிலமோ, ஹிந்தியோ தெரியாது. அதன்பின் அந்த இயக்குனரின் உதவியாளர் என்னை மும்பைக்கு வரச் சொன்னார், ஆனால் நான் போகவேயில்லை. அந்தப் படம் இதுவரை நடக்கவேயில்லை.
ஹிந்தித் திரையுலகிலும் அப்படியான அனுபவம் உள்ளது. சமீபத்தில்தான் அது நடந்தது. ஒரு இயக்குனர், எனது க்ளீவேஜ் எப்படி இருக்கிறது எனப் பார்க்க வேண்டும் என்றார், மற்றொருவரோ எனது தொடையைப் பார்க்க வேண்டும் என்றார்,” எனக் கூறியிருக்கிறார்.
சுர்வீன் சாவ்லாவின் இந்த பேட்டிதான் தற்போது பாலிவுட் வட்டாரங்களில் வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது.




