ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு தமிழக முதல்வரிடம் 2 கோடி ரூபாய் நிதி வழங்கியது. அதை தொடர்ந்து பெப்சி தொழிலாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியது. இதற்கான காசோலையை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம், லைகா முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆர்.கே.செல்மணி கூறியதாவது: கொரோனா தொற்றின் முதல் அலையை விட இந்த முறை தான் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு வழங்கும் 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை திரைப்பட தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். கடந்த முறை நடிகர், நடிகைகள் அதிக அளவில் நிவாரண உதவிகள் வழங்கினார்கள். இந்த ஆண்டு குறைவாக இருக்கிறது. தற்போது லைக்கா நிறுவனம் கொடுத்திருக்கும் தொகைதான் அதிகமானது. நடிகர், நடிகைகள் இன்னும் உதவ வேண்டும் என்று அவர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். தற்போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தியேட்டர்களும் திறக்கப்பட்டு நிலைமை சீராகும் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறோம். என்றார்.




