தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

பாகுபலி படத்திற்காக அழகான கதையை வடிவைத்ததன் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய கதாசிரியராக மாறிவிட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத்.. ஆனால் அதேசமயம் தன்னைவிட மிக திறமையாளராக, தனக்கு சரியான போட்டியாளாரக அவர் கருதுவது தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுபற்றி அவர் கூறும்போது, “பூரி ஜெகன்நாத்தை எனது எதிரி என்றே சொல்லுவேன். அதனாலேயே அவரது புகைப்படத்தை எனது மொபைல் போனில் வால்பேப்பராக பதிவு செய்து வைத்துள்ளேன்.. காரணம் அதை பார்க்கும்போதெல்லாம் அவரை விட இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற உத்வேகத்தை எனக்கு நானே உருவாக்கி கொள்ளத்தான்” என கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்




