ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பழைய பொருட்களை வாங்கி விற்கும் ஒரு இணைய தளத்தை தன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி இருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணி. இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த மோசமான உயிர்க்கொல்லி பெருந்தொற்று மக்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளது. வாழ்வில் எது முக்கியம் என்ற நிதர்சனத்தை நமக்கு இந்த நெருக்கடி காலம் உணர்த்தியுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் நிறைய பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய காலத்தில் நாம் உண்ண உணவும், உறைவிடமும் கிடைக்கப் பெற்றிருப்பதே பெரும் பாக்கியம். நமக்கு அடிப்படை வசதிகள் எல்லாம் கிடைக்கிறது என்றால் நாம் அதற்காக நன்றியுடன் இருக்க வேண்டும். வாழ்க்கை நிலையற்றது. இந்த நிலையற்ற வாழ்வில் நாம் நமக்குக் கிடைத்த வளங்களுக்கு நன்றியுடையவர்களாகவும் தேவையுள்ளவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
நான் எப்போதுமே எளிமையாக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் குறைவானதே நிறைவு. எனது இந்தக் கொள்கை எனது ஆடைகளுக்கும் பொருந்தும். இருப்பினும், பலரைப் போல் காலப்போக்கில் எனது தேவைகளை மிஞ்சி எனது உடைமைகள் சேர்ந்திருப்பதை உணர்ந்தேன்.
அதனால் எனது தேவையைத் தாண்டி இருப்பவற்றை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த விரும்புகிறேன். என்னைப் போல், எத்தனை பேர் உங்கள் வீட்டில் உங்களின் தேவையைத் தாண்டியும் பொருட்களை சேர்த்து வைத்திருக்கிறீர்கள்? உங்களின் அலமாரியில் எத்தனை பேர் பலவருடங்களாக அணியாத துணிகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறீர்கள். இப்படி உபயோகிக்காமல் தேவைக்கு மிஞ்சியிருக்கும் நம் உடைமைகளை ஒரு நல்ல காரியத்திற்கு உதவ உபயோகிப்பதே சிறப்பான வழி எனக் கருதுகிறேன்.
சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக த்ரிப்ட் ஷாப்பிங் பிரபலமாகியுள்ளது. த்ரிப்ட் ஸ்டோர் என்றால் மக்கள் தாங்கள் உபயோகிக்காத துணிகள், கைப்பைகள், காலணிகள், புத்தகங்கள் ஆகியவற்றை தானமாகக் கொடுக்கும் இடம். அப்படிப் பெறப்பட்ட பொருட்களை சமூக வலைதளத்தில் ஒரு பக்கத்தை உருவாக்கி அதில் பதிவு செய்யப்படும்.
அந்தப் பொருட்கள் அனைத்தும் மிகமிகக் குறைந்த விலையில் விற்க பட்டியலிடப்படும். எளிதாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் முன்பு உபயோகிக்காமல் சேர்த்து வைத்திருக்கும் பொருட்களை விற்பனை செய்யும் தளம் இது.
பலகட்ட திட்டமிடுதலுக்குப் பின்னர் நானும் எனது குழுவினரும் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளோம். இங்கு தானமாக பெறப்படும் அனைத்துப் பொருட்களும் விற்கப்பட்டு, அவ்வருவாய் தேவையுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும். இந்த முயற்சியில் என்னுடன் நீங்கள் அனைவரும் கரம்கோர்த்து இதை வெற்றியடையச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். எனத் தெரிவித்திருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணி.