நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு | தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்…. | ஆஞ்சநேயர் பிறந்த ஊரில் பூஜையுடன் துவங்கிய 'ஜெய் ஹனுமான்' |

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷை தன்னுடைய 'ராஞ்சனா' படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆனந்த் எல் ராய். தற்போது தனுஷ், ஹிந்தியில் நடித்து வரும் 'அத்ரன்கி ரே' படத்தின் இயக்குனரும் ஆனந்த் தான். தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் கடந்த வாரம் தான் ஓடிடி தளத்தில் வெளியானது.
அப்படத்தை ஆனந்த் பார்த்துவிட்டு அவரது கருத்தை டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். “அற்புதம், புத்திசாலித்தனம்....கர்ணன் படத்தின் அனுபவத்தை இப்படித்தான் என்னால் விவரிக்க முடியும். மாரி செல்வராஜ், என்ன ஒரு அற்புதமாக கதை சொல்லியிருக்கிறார். உங்கள் எண்ணங்களை செல்லுலாய்டில் அழகாக வரைந்திருக்கிறீர்கள். தனுஷ், நீ ஒரு நடிகர் என நான் நினைத்தேன், எனது நண்பா நீ ஒரு மந்திரவாதி என என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'கர்ணன்' படம் கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியான போது கிடைத்த விமர்சனம், பாராட்டுக்களை விட தற்போது ஓடிடி தளத்தில் வெளிவந்த பிறகு பலரும் பல காட்சிகளை நிறுத்தி நிறுத்திப் பார்த்து தற்போது இரண்டாவது ரவுண்டாக விமர்சித்து வருகிறார்கள்.