தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாடெங்கிலும் கொரோனா இரண்டாவது அலை பரவ துவங்கியுள்ளது. கடந்த வருடம் முதல் கட்டத்தை எதிர்கொண்டது போல, தற்போதும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டாலும் கூட, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் படுக்கை வசதிகள் கிடைக்கவில்லை என்கிற செய்திகளும் வெளியாகி வருகின்றன. இது உண்மைதான் என, தனது சொந்த அனுபவத்தில் இருந்து வேதனையுடன் தெரிவித்துள்ளார் பிரபல கன்னட நடிகரும் இயக்குனர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவருமான சாது கோகிலா.
இதுபற்றி அவர் கூறும்போது, “கடந்த சில தினங்களுக்கு முன் எனது சகோதரரின் மகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம்.. ஆனால் பற்றாக்குறை காரணமாக, அவனுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உடனடியாக கிடைக்கவில்லை. அதன்பின் நான் அலைந்து திரிந்து ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்பாடு செய்தேன். பிரபலமான எனக்கே இந்த நிலை.. ஆக்சிஜன் சிலிண்டருக்காக மட்டுமல்ல, கொரோனா பாதிப்பால் இறந்தவர்களை எரிப்பதற்கும் புதைப்பதற்கும் கூட பதிந்து வைத்து மயானங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் தான் நிலவுகிறது” என தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.