இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' |

நடிகர் ராதாரவிக்கும்-பாடகி சின்மயிக்கும் நீண்டகாலமாகவே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, வைரமுத்துவை மீடூ சர்ச்சையில் சின்மயி கொண்டு வதந்தபோது தொடங்கிய இந்த சர்ச்சை காரணமாக சின்மயியை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கினார் ராதாரவி. அதையடுத்து நீதிமன்றத்திற்கு சென்று அந்த பிரச்சினையில இருந்து மீண்டு வந்தார் சின்மயி.
இந்த நிலையில் தற்போது நயன்தாரா-உதயநிதி குறித்து ராதாரவி சர்ச்சையாக பேசியிருப்பதை அடுத்து அவருக்கு கண்டனம் தெரிவித்து ஒரு டுவீட் போட்டுள்ளார் சின்மயி. அந்த பதிவில், இந்த மனிதராலும், அவரது பேச்சாலும் நான் ரொம்பவே டயர்டு ஆகி விட்டேன். இதற்கு மேல் என்னால் முடியவில்லை. வெளிப்படையாகவே ஆபாசமாக பேசும் இவரை ஒரு கட்சி எப்படி நட்சத்திர பேச்சாளராக நியமித்துள்ளது என்பது எனக்கு தெரியவில்லை.
திமுகவின் ஆ.ராசாவாக இருக்கட்டும், ராதாரவியாக இருக்கட்டும் எல்லோருமே மோசமாகவே பேசி வருகிறார்கள். இவர்களுக்கு நாம் தான் வாக்களித்து அதிகாரத்தை கொடுத்து விட்டோம் என்று பதிவிட்டுள்ளார் சின்மயி.




