புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
நடிகர் ராதாரவிக்கும்-பாடகி சின்மயிக்கும் நீண்டகாலமாகவே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, வைரமுத்துவை மீடூ சர்ச்சையில் சின்மயி கொண்டு வதந்தபோது தொடங்கிய இந்த சர்ச்சை காரணமாக சின்மயியை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கினார் ராதாரவி. அதையடுத்து நீதிமன்றத்திற்கு சென்று அந்த பிரச்சினையில இருந்து மீண்டு வந்தார் சின்மயி.
இந்த நிலையில் தற்போது நயன்தாரா-உதயநிதி குறித்து ராதாரவி சர்ச்சையாக பேசியிருப்பதை அடுத்து அவருக்கு கண்டனம் தெரிவித்து ஒரு டுவீட் போட்டுள்ளார் சின்மயி. அந்த பதிவில், இந்த மனிதராலும், அவரது பேச்சாலும் நான் ரொம்பவே டயர்டு ஆகி விட்டேன். இதற்கு மேல் என்னால் முடியவில்லை. வெளிப்படையாகவே ஆபாசமாக பேசும் இவரை ஒரு கட்சி எப்படி நட்சத்திர பேச்சாளராக நியமித்துள்ளது என்பது எனக்கு தெரியவில்லை.
திமுகவின் ஆ.ராசாவாக இருக்கட்டும், ராதாரவியாக இருக்கட்டும் எல்லோருமே மோசமாகவே பேசி வருகிறார்கள். இவர்களுக்கு நாம் தான் வாக்களித்து அதிகாரத்தை கொடுத்து விட்டோம் என்று பதிவிட்டுள்ளார் சின்மயி.