தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

தமிழில் ஏஸ், மதராஸி படங்களில் நடித்த ருக்மணி வசந்த், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். ரிஷப் ஷெட்டியுடன் அவர் நடித்து தற்போது திரைக்கு வந்துள்ள காந்தாரா சாப்டர்-1 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் மூலம் பான் இந்தியா நடிகையாக இவர் உயர்ந்துள்ளார். இதையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் டிராகன், யஷ் நடிக்கும் டாக்சிக் போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ருக்மணி வசந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில், தன்னை மிகவும் கவர்ந்த ஹீரோவாக தெலுங்கு நடிகர் நானியை குறிப்பிட்டுள்ளார். காரணம் அவரது நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கும். அதனால் அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார் ருக்மணி வசந்த்.