மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம் 250 கோடி வசூலைக் கடந்து ஓடி வருகிறது. மற்ற மொழிகளில் மட்டும் இப்படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் நடிகர் துல்கர் சல்மான், “19 நாட்களில் 50 கோடி ரூபாய் இந்திய மொத்த வசூல்! தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட பார்வையாளர்களின் இந்த அசாதாரண அன்புக்கு நன்றி. ஒவ்வொரு முறையும் நீங்கள் நல்ல திரைப்படங்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறீர்கள், அதுதான் இந்த பயணத்தை மிகவும் சிறப்பாக்குகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
'லோகா' படத்தின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என்பதற்காக தான் நடித்த 'காந்தா' படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைத்துள்ளார் துல்கர். கடந்த வாரம் செப்டம்பர் 12ம் தேதி இப்படம் வெளியாக வேண்டியது. ஆனால், தள்ளி வைத்துள்ளார்கள். தீபாவளிக்கு வருமா அல்லது இன்னும் தள்ளிப் போகுமா என்பது இனிமேல் தான் தெரிய வரும்.