மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை | சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? |
நடிகர் ரவிமோகன் ‛ரவிமோகன் ஸ்டூடியோஸ்' என்ற பெயரில் சொந்த பட நிறுவனத்தை இன்று துவங்கியுள்ளார். இதன் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், அதர்வா, நடிகைகள் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கன்னட ஹீரோ சிவராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: நான் கல்லூரி காலத்தில் ரவி மோகன், ஜெனிலியா படங்களை பார்த்து ரசித்து இருக்கிறேன். மீண்டும் அவர்கள் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. ரவிமோகன் தயாரிப்பாளர் ஆகிவிட்டார். எனக்கும் நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி அதிகம். பல ஹீரோக்கள் பட நிறுவனம் தொடங்க வேண்டும். திறமைசாலிகளுக்கு களம் அமைத்து தர வேண்டும். அது அம்மா மாதிரியான பீலிங்.
இப்ப ஒரு படம் தயாரித்து கொண்டு இருக்கிறேன். அந்த படத்தை எடிட்டிங்கில் பார்த்து அவ்வளவு சந்தோசப்பட்டேன். தயாரிப்பு விஷயத்தில் நான் ரவிமோகனுக்கு சீனியர். என்னால் முடிந்த உதவிகளை வழங்க தயார். அவரின் இந்த கம்பெனியிலும் நடிக்க ரெடி. அவர் இன்றே அட்வான்ஸ் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வேன். பராசக்தி படத்தில் ரவியுடன் இணைந்து நடிக்கிறேன்..அவர் நிறைய பேசி இருக்கிறார். சுதா இயக்கும் அந்த ‛செட்' வேறு மாதிரி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் நடிகர் ரவி மோகன் தனது தாயாரை போற்றும் விதமாக ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கி, அந்தப் பாடலுக்கான வரிகளை அவரே எழுதியிருந்தார். நடிகர் ரவி மோகனின் தோழியும் பாடகியுமான கெனிஷா அந்த பாடலை பாடியுள்ளார். பின்னர் விழாவில் பாடகி கெனிஷா பேசுகையில், ‛‛ரவி மோகன் ஸ்டுடியோவில் நானும் ஒரு பங்காக இருப்பது பெருமையாக இருக்கு. ரவி எனக்கு அவரது அம்மா, அண்ணன் என்று நல்ல சொந்தங்களை கொடுத்து உள்ளார். ரவி என்ன சோகம் இருந்தாலும் வெளியில் சந்தோசமாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார். கஷ்டத்தில் வரவர்களுக்கு துணை நிற்கிறீர்கள். அவரை கடவுளாக பார்க்கிறேன்'' என்றார்.