நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் |
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ஸ்ரீ லீலா, தற்போது தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‛பராசக்தி' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் ‛ஆஷிகி -3' என்ற படத்தில் கார்த்திக் ஆரியனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
இந்தநிலையில் தற்போது பாலிவுட் ஊடகங்களில் கார்த்திக் ஆரியனும், ஸ்ரீலீலாவும் காதலிப்பதாக ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து உடனடியாக அதற்கு ஒரு மறுப்பு தெரிவித்திருக்கிறார் ஸ்ரீ லீலா. அவர் கூறுகையில், ‛‛என்னை பற்றி வெளியாகும் காதல் செய்தி முற்றிலும் வதந்தியாகும். சினிமாவை மட்டுமே நான் காதலித்து வருகிறேன். அதோடு நான் படப்பிடிப்புக்கு செல்லும் ஒவ்வொரு நாளும் என்னுடைய தாயார் என்னுடன்தான் இருப்பார். அப்படி இருக்கும்போது நான் எப்படி காதலிக்க முடியும். அதனால் இதுபோன்ற செய்தியை யாரும் நம்பவேண்டாம். மேலும் சினிமாவில் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு மேல் நடிக்க ஆசைப்படுகிறேன். அதனால் இது போன்று வதந்திகளை பரப்பி என் மார்க்கெட்டை சரித்து விடாதீர்கள்'' என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்ரீ லீலா.