சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். தமிழில் சூரி, சசிகுமார் ஆகியோருடன் இணைந்து 'கருடன்' படத்திலும் நடித்துள்ளார். அவர் மீது அவருடைய மேனேஜர் விபின் குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த வாரம் மலையாளத்தின் மற்றொரு முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடித்த 'நரிவேட்டா' படம் வெளிவந்தது. அந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் விபின். அதனால், கோபமடைந்த உன்னி முகுந்தன், அவரது மேனேஜர் விபினை வார்த்தைகளாலும், அடித்தும் காயப்படுத்தியுள்ளார் என புகாரில் உள்ளதாம்.
புகார் அளித்த பின்பு, செய்தியாளர்களை சந்தித்த விபின் இது பற்றி கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உன்னி முகுந்தன் தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை சொல்லப்படவில்லை. மலையாள சினிமா உலகில் இளம் நடிகர்களுக்கு இடையில் இப்படி ஒரு பொறாமை இருக்கிறதா என ஆச்சரியப்பட வைத்துள்ளது.
உன்னி முகுந்தன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'மார்க்கோ' படம் 100 கோடி வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது.