பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? | பிளாஷ்பேக்: புதுப்புது அனுபவங்களோடு 'த்ரில்லர்' கதையாக வந்து, திகைப்பில் ஆழ்த்திய சிவாஜியின் “புதியபறவை” | மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம் | காதல் கொண்டேன் 2 வரும் : சோனியா அகர்வால் தகவல் | ஒரே வாரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'மோனிகா' பாடல் | எளிமையாக நடந்த தலைவன் தலைவி வெற்றி விழா |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் ‛பார்க்கிங், லப்பர் பந்து' என தொடர்ந்து வித்தியாசமான கதைகளைக் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் அளித்த பேட்டியில் கவினுடன் போட்டி என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர் கூறியதாவது, "காலம் காலமாக இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டி என்பது உள்ளது. ரஜினி, கமல் தொடங்கி அப்படித்தான் பார்த்துள்ளோம். இப்போது வரை அந்த போட்டி தொடரத்தான் செய்கிறது. ஆனால், என்னை பொறுத்தவரை போட்டி என்பது இரண்டு பேருக்கு இடையே தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதிலும் இப்போது வளர்ந்து வரக்கூடிய வகையைச் சேர்ந்த நடிகர்கள் அனைவருமே போட்டியாளர்கள் தான்.
நாம் வளர்ந்த பிறகு நமது பார்வை மாறலாம். நாம் கடைசியாக நடித்த படத்தின் சாதனையை முறியடிப்பது தான் பெரிய சவால் என்று நினைக்கிறேன். கடைசியாக நான் நடித்த படம் மூலம் எனக்கு சில விஷயங்கள் கிடைத்தன. அந்த படத்தை விட இப்போது நான் நடித்து வரும் படங்களில் சிறப்பாக என்ன செய்யலாம் என பார்க்க வேண்டும். அதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். அந்த வகையில் பார்த்தால் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். எல்லாருமே நல்ல படம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.