என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'புஷ்பா 2'. இப்படம் தற்போது 1400 கோடி வசூலைக் கடந்துள்ளது. இருந்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இப்படம் 'பிரேக் ஈவன்' ஆனது. தற்போதுதான் லாபக் கணக்கை ஆரம்பித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் வியாபாரம் ஒட்டுமொத்தமாக சுமார் 600 கோடி ரூபாய்க்கு நடந்தது. அவ்வளவு தொகையை வசூலிக்க வேண்டுமென்றால் ஏறக்குறைய இரண்டு மடங்கு அளவுக்காவது வசூல் கிடைக்க வேண்டும். அந்த வசூல் சில தினங்களுக்கு முன்புதான் கிடைத்தது.
இப்படம் தெலுங்கில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆனது. அங்கு தற்போதுதான் அந்த அசல் தொகை வசூலை அடைந்துள்ளதாம். அடுத்து வரும் வசூல்தான் அங்கு லாபக் கணக்கில் சேரும். அதேசமயம் மற்ற மாநிலங்களில் இப்படம் கடந்த வாரத்திலேயே லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள்.
படத்தைப் பொறுத்தவரையில் தயாரிப்பாளருக்கு மிகப் பெரும் லாபம். ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை, இசை உரிமை இதர உரிமைகள் என அதில் மட்டுமே குறைந்த பட்சம் 300 கோடி வரை கிடைத்திருக்கலாம் என்பது தகவல். தியேட்டர் வசூல் மூலமும் பல கோடிகள் கிடைக்கும்.