தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார்.
விழாவில் ரஜினி பேசியதாவது: கருணாநிதி நுாற்றாண்டை கொண்டாடியது போல் வேறு எந்த தலைவரையும் கொண்டாடியது இல்லை. கலை, இலக்கியம், அரசியல் என அனைத்திலும் சிறந்த அறிஞர் கருணாநிதி. போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றிபெற்தே அவர் ஆளுமைக்கு உதாரணம். உலகில் வேறு எந்த தலைவரையும் இப்படி கொண்டாடியது இல்லை.
திமுகவில் மூத்த மாணவர்களை சாமாளித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு 'ஹேட்ஸ் ஆப்'. அமைச்சர் துரைமுருகனை சாமாளிப்பது கடினம் என கருணாநிதியே சொல்லி இருக்கிறார். கருணாநிதியுடன் அரசியல் பேசினால் எச்சரிக்கையாக பேச வேண்டும். கருணாநிதி நினைவிடம் ஒரு தாஜ்மகால். கருணாநிதியின் பேச்சு வீணை போன்றது. பத்திரிகையாளர்களை புன்னகையுடன் எதிர்கொள்வார். கருணாநிதிக்கு வந்த சோதனை வேறு யாருக்காவது வந்தால் காணாமல் போயிருப்பார்கள். எதை பேச வேண்டும் என்பதை விட எதை பேசக்கூடாது என்பது முக்கியம்.
தேர்தல் வெற்றிகள் முதல்வர் ஸ்டாலின் ஆளுமையை காட்டுகிறது. கருணாநிதி மீது மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்டவர் ஸ்டாலின்.
புத்தகத்தின் விலை ரூ.1000 என்பது ரொம்ப அதிகம். குறைத்தால் அனைவரும் படிப்பார்கள். இவ்வாறு ரஜினி பேசினார்.