காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

சினிமா பிரபலங்கள் பலரும் சுற்றுலா என்றால் வெளிநாடுதான் செல்வார்கள். நம் நாட்டில் உள்ள பல இடங்களுக்கும் அவர்கள் சென்றால் அந்த இடங்களும் ஓரளவிற்கு பிரபலமாகும். ஆனால், வேறு வெளிநாடுகளுக்குச் சென்று அந்த இடங்களைப் பிரபலமாக்குகிறார்கள் சிலர்.
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா வித்தியாசமாக நம் நாட்டிலேயே சுற்றுலா சென்றுள்ளார். வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மலைப் பிரதேசமான சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அதன் புகைப்படங்களை சிலவற்றைப் பகிர்ந்து, “சிக்கிம் இதுவரை... மிகவும் சாகசமாக உள்ளது!!! காங்டாக்கிலிருந்து லாச்சுங்கிற்குச் செல்ல திட்டமிட்டோம், ஆனால் நிலச்சரிவு காரணமாக, சாலைகள் தடைபட்டன, அதற்கு பதிலாக பெல்லிங்கிற்குச் சென்றோம், அது இப்போது சிக்கிமில் எனக்குப் பிடித்த இடமாகும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வட கிழக்கு மாநிலங்களுக்கு நமது மக்கள் சுற்றுலா சென்றால் அந்த மாநிலங்களும் வளர்ச்சி பெறும். ஆண்ட்ரியாவைத் தொடர்ந்து மேலும் சில சினிமா பிரபலங்கள் இதைச் செய்தால் நல்லது.




