ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' |
ஆந்திர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகை ரோஜா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்து வருகிறார். சமீபத்தில் ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் இரண்டும் ஒரே நாளில் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் நகரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு இருக்கிறார் ரோஜா.
இந்நிலையில் இன்று அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ஒவ்வொரு ஆண்டும் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து நான் சாமி தரிசனம் செய்து வருகிறேன். நேற்று இரவு கிரிவலம் செய்தேன். இன்று சாமி தரிசனம் செய்திருக்கிறேன். அண்ணாமலையாரின் அருளால் அனைத்து மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்ததாக கூறிய ரோஜா, ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.