சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
சிவாஜி எம்,ஜி.ஆர் ஆகிய இரு ஆளுமைகளை தன் வசனங்களால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக மாற்றியவர் கருணாநிதி என நடிகர் கமலஹாசன் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு நடிகர் கமலஹாசன் பேசியதாவது:
சினிமாவில் இருந்த போது அரசியலையும், அரசியலில் இருந்த போது சினிமாவையும் மறக்காமல் இருந்தவர் கருணாநிதி அவர் தன்னையும் வளர்த்தார், தமிழையும் வளர்த்தார், தமிழ்நாட்டையும் வளர்த்தார். கருணாநிதியின் பண்பு முதல்வர் ஸ்டாலினிடமும் உள்ளது.நெருங்கிய நண்பர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கை சிறப்பான முறையில் நடத்தி தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் . கருணாநிதி இருந்தாலும்இல்லாவிட்டாலும் அவர் எனக்கு சூட்டிய கலைஞானி என்ற பட்டம் என்னை தொடர்கிறது என்னைத் தொடரும்.
எனது தமிழ் ஆசான் எம்.ஜி.ஆர்
தமிழும் கருணாநிதியும், சினிமாவும் கருணாநிதியும், அரசியலும் கருணாநிதியும் பிரிக்க முடியாதவை.எனது தமிழ் ஆசான்கள் மூன்று பேர் . கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி, எம்.ஜி.ஆர். என பேசினார்.